Tuesday, December 9, 2008

திருமணவாழ்க்கை

என் மனைவியை நான் பெண்பார்க்க சென்றபோது நினைத்ததுபோன்று இல்லை. எனது குடும்பவாழ்க்கைக்கு ஏற்ற சிறந்த்த பெண் என பிறகு அறிந்தேன். அவளது சமையல் மிச்சிரப்பானது.

எங்கள் இருவருக்கும் ஒரு சிறிய மனக்குறைவு ஒன்று உண்டு அது வெளிநாட்டு பயணம், எனக்கு பிடிக்காத ஒன்று அது, காரணம் நான் எனது பெற்றோரை பிரிந்து வாழ விருப்பம் இல்லை. அது சிறிய பிரிவை இருப்பினும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது. ஒருமுறை நான் சென்னை சென்றபொழுது அவரது அம்மா கூட வற்புறுத்தினார், அவர் சொன்னது எனது நன்மைக்கே என்றாலும் விருப்பமில்லை.

திருமணம்

எனது திருமணம் பழனியில் நடந்தது. திருமணநாளில் எனது உறவினர் முத்துமாணிக்கம் வழக்கம்போல் சிறிய பிரச்சனை எழுப்பினார், இது அவரது வழக்கம், அவர் வீட்டு விழாக்களில் மட்டும் அமைதிகாப்பார்.

இருப்பினும் திருமணம் சிறப்பாய் நடந்தது...

பெண் பார்த்தல்

நான் முதலில் நேரடியாக பார்த்த பெண் என் மனைவி. முதலில் அவளை திருமணம் செய்ய தயங்கினேன் காரணம் அவளை பார்க்கும் முன் எனது உறவினர் பெரிய இடம் நல்ல குடும்பம் என்றனர். எனக்கு பெரிய இடத்தில் திருமணம் செய்ய விருப்பம் இல்லை காரணம் அவர்கள் விருப்பத்திற்கு நாம் மாற நேரிடும், இருப்பினும் உறவினர்களின் விருப்பத்தால் சம்மதம் தெருவித்தேன், மற்றும் சபரி அவளை பற்றி நல்ல விதமாய் தெருவித்ததாலும் பழனி மாமா விருப்பம் தெருவித்ததாலும், அவர் விருப்பம் எனக்கு சம்மதம் சொல்ல தூண்டியது எனவே சம்மதம் தெருவித்தேன்.
இருப்பினும் சிறிது காலம் அவளை நான் எனது நண்பராத்தன் பார்த்தேன், காலப்போக்கில் அதுவே காதலாய் மாறியது.