Friday, October 5, 2007

நிலாரசிகன் - கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்...

(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)

பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்

நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...

எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!

எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!

எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!

கல்லூரித்தாயே!

உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.

உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..


கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....

இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!

அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!

என் ஜன்னல்த்தோழனே!

நலமா நீ?

எங்கே என் மரத்தோழன்?

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?

தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?

நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.

இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...


இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!

பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.

இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.

உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.

இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.

இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.

பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!


இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?

பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.

-தொடரும்....

Monday, September 17, 2007

குலதெய்வம் கோவில் கும்பாபிசேகம்

சென்ற மாதம் எங்கள் குலதெய்வம் கோவில் கும்பாபிசேகம், எங்களுக்கு இரண்டு குலதெய்வம் கோவில் உண்டு, ஒன்று வேடசந்தூர் திண்டுக்கலில் இருந்து 21 மைல் தொலைவில் உள்ளது, மற்றொன்று வேடசந்தூரில் இருந்து 11 மைல் கல் தொலைவில் உள்ளது. முறையே தேவி குங்குமகாளி அம்மன், தேவி பொட்டி அம்மன் என அழைக்கபெறும்.

எங்கள் பங்காளிகளில் அனுபவம்மிக்க, திறமைவாய்ந்த பெரியோர்கள் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடினோம், கோவில் சுமார் 1.75 கோடி செலவில் கட்டப்பட்டது. இவை எங்கள் பங்காளிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டது, மற்ற எவரிடமும் வசூல் செய்யவில்லை. எங்கள் கோவிலில் 800 தலைக்கட்டு உள்ளது தலைக்கட்டு என்றால் திருமணம் ஆன ஆண்கள், அவ்வறு அழைக்க பெருவர். கோவில் கும்பாபிசேகம் ஆகஷ்டு மாதம் முறையே 30, 31 தேதிகளில் நடைபெற்றது.

Tuesday, September 4, 2007

நான் ரசித்த கல்லூரி கவிதை...

கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்...
(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று
என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)

பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின் ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்

நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...

எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!

எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!

எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!

கல்லூரித்தாயே!

உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.

உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..

கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....

இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!

அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!

என் ஜன்னல்த்தோழனே!

நலமா நீ?

எங்கே என் மரத்தோழன்?

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?

தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?

நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.

இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...


இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!

பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.

இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.

உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.

இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.

இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.

பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!


இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?

பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.

-தொடரும்....

Friday, June 8, 2007

சென்னை

நான் படிக்கும் காலத்தில் தரமான மேல் சட்டை, கால் சட்டை எதுவும் வாங்கியது இல்லை. சுந்தரிடம் பழகிய பின்புதான் வாங்கினேன். மாதம் ஒரு முறையேனும் அசைவம் உண்ண, புது ஆடைகள் வாங்க செல்வோம். நான் வேலைக்கு சேர்ந்த பின்பும் சுந்தர் எனக்கு நிறைய செலவு செய்தது உண்டு, முக்கியமாக அசைவ உணவு உண்ண செல்லும் பொழுது என்னை கட்டாயம் அழைத்து செல்வார்.

யோகேஷ் ராம்கோவில் வேலைக்கு சேர்ந்த பின்பு எங்களிடம் அவ்வாறாக நேரம் செலவிடவில்லை, காரணம் வேலை பழு அதிகம் என்பதால். எங்களை கண்டு பொறாமை கொள்வது உண்டு, அதை விட அதிகம் சந்தோஷம் கொள்வான், இன்றும் கல்லூரி வாழ்க்கை போல் சந்தொஷமாய் ஊர் சுற்றுவதை பார்த்து.

என்றாவது ஒரு நாள் நாங்கள் புகைபிடிப்பது என முடிவெடுத்து நான் தங்கராஜா வடிகட்டி புகையிலை வாங்கிவர சொல்வேன், நான் செல்வதர்க்கு காரணம் என் மேல் நல்ல அபிப்பராயம் யாரிடமும் கிடையாது, மற்ற வர்களுக்கு அப்படி இல்லை. மணி 11 ஆன பின்பு நான், சுந்தர், யோகேஷ் சிகரெட்டை எடுத்துகொண்டு குளியல் அறைக்கு செல்வோம், நான் உடனே பற்ற வைத்து ஆரம்பித்துவிடுவேன். யோகேஷ், சுந்தரும் மற்றவர்கள் வருகிறார்களா (முக்கியமாக கணபதி அண்ணன்) என பார்பதிலேயே நேரத்தை வீனடிப்பர். நான் அடித்து முடுத்தவுடன் அறையில் வந்து படுத்துவிடுவேன். கணபதி அண்ணன் அப்பொழுதுதான் வருவார்; இருவரும் பார்த்துவிட்டால் தப்பித்தனர், இல்லாமல் சுந்தர் மட்டும் பார்த்தால் தொலைந்தான் யோகேஷ் காரணம், சுந்தர் உடனே வாயை கழுவி விட்டு நேரே கணபதி அண்ணனிடம் வந்து யோகேஷ் தம் அடிக்கிரான் வந்துபாருங்கள் என்று அழைத்து சென்று காண்பித்துவிடுவான், அவன் இவரை பார்த்தவுடன் பேந்த பேந்த முளிப்பான். நான் திடீரென வந்து "என்னடா செய்கிராய், எவ்வளவு நாளாக இது" என்று ௯றி விட்டு சென்று விடுவேன். நடந்த நிகழ்வுக்கு முக்கிய காரணகத்தவே நான் தான், ஆனால் ஒன்றும் தெறியாதது போன்று இருந்து விடுவேன். நான் ஏற்க்கனவே சொல்லி இருக்கேன், எனக்கும் சுந்தருக்கும் யோகேஷ் தான் பலிகடா.

சென்னையில் நாங்கள் தங்கிய விடுதியில், எங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஒவ்வொரு வார ஞாயிற்று கிழமையும் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் தரும் நாள். காலையில் 7 மணி அளவில் யாராவது ஒருவர் எழுந்து 1 மணி நேரமாக மற்றவரை எழுப்புவோம். மணி 8 ஆன பின்பு ஒவ்வொருவராக காலைகடனை முடிக்க செல்வோம்; பிறகு டீ குடிக்க செல்வோம் என்று முடிவெடுத்து சென்று கையில் அகப்படும் தின்பன்டங்கலையெல்லாம் ஒருபுடி புடிபோம் ( நாங்கள் பொங்கல் பொடுவதற்காகவே யோகேஷ்யை அழைத்து செல்வோம்) முடிவில் யோகேஷ் தான் பணம் செலுத்துவான்.

இது முடியவே மணி 9:30 ஆகிவிடும் அப்புறம் எங்கே காலை உணவு, நேரே விடுதிக்கு சென்று 2 மணி நேரம் ஒரு கலாட்டா, இதற்கு நண்பர் சுந்தர் தான் தலைமை வகிப்பார். விடுதியில் வேலைசெய்யும் மாஷ்டர், நண்பர் உமா இவர்கள் தான் அடிக்கடி மாட்டுவர். பிறகு 12 மணிக்கு எங்கள் அறைக்கு சென்று ஆடைகளை துவைப்பது என முடிவு எடுப்பார் நண்பர் யோகேஷ்ம், ஈஷ்வரும். துவைப்பதர்க்குள் பெறிய கலாட்டாவே நடக்கும். ஒருவழியாக எல்லாம் முடிய மணி 3 ஆகிவிடும் பிறகு மதிய உணவு உண்ண செல்வோம் அங்கே அதற்குள் காய்கறி எல்லாம் முடிந்துவிடும் ஒரே ஒரு ௯ட்டு மட்டுமே வைப்பார்கள், சுந்தருக்கு கோபம் வரும் 'முன்னரே சொன்னேன் சீக்கிரம் கிலம்பலாம் என்று கேட்டீர்களா' என்று ௯றி திட்டுவான், இங்கும் யோகேஷ் தான் திட்டுவாங்குவது வழக்கம்.

வாழ்வில் முன்னேர தர்ப்பொழுது இருக்கும் வேலை சாதகமாய் இருக்கது என்பதால் வேரு வேலை தேட ஆரம்பித்தோம். எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததால் நான் அவர்களை பிரிய நேர்ந்தது இது என்னை வறுத்தத்தில் ஆழ்த்தியது, ஆயினும் எதிர்காலத்தை மனதில் கொண்டு சென்னை விட்டு கிலம்பினேன்; இது தற்காலிகம் என்பதால் ஒரு ஆனந்தம்.

சச்சீனா நான் பெங்களூரில் சேர்ந்த மென்பொருள் தொழிலகம். பெங்களூர் வந்த நான் நண்பர் செல்வாவை தொடர்பு கொண்டு தற்காலிகமாக தங்குவதற்க்கு உதவி நாடினேன், அவருடன் நண்பர் ஜகதீஷ்ம் தங்கி இருந்தார். செல்வா என்னை நிரந்தர மாக தங்க ௯றினார். சந்தோசமாக அங்கே தங்கினேன், பழைய நண்பர்களுடன் இனைந்தால் சந்தோஷத்திற்க்கு சொல்லவா வேண்டும். அங்கே எனது பழைய நண்பர் ராஜேஷ் இருந்தார் முதல் மாடியில் குடும்பத்துடன். கல்லூரியில் படிக்கும் பொழுது கருத்து வேருபாட்டின் காரணமாக பிரிந்தோம்.

சென்னை நண்பர்கள், அவைகளுடன் இருந்த நாட்களை நினைத்து பார்த்து மகிழ்வதுண்டு; பசுமையான நாட்கள் சதோஷமான தருணங்கள்.

Wednesday, June 6, 2007

பெங்களூர்

பெங்களூரில் எனது உறவினர்கள் நிறைய உண்டு, அவர்கள் வீட்டில் நான் தங்கவில்லை காரணம். எனது தந்தையும் அவரது சகோதரரும் ௯ட்டு குடும்பமாய் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் 4 கடைகள் இருந்தது, 1976-க்கு பிறகு எனது தந்தையே 4 கடைகளையும் கண்காணித்தார். தினமும் இறவு 11 மணிக்கு பின்னரே வீடு திரும்புவார். அவரால் 4 கடையின் நிற்வாகத்தையும் கண்காணிக்க முடியாமல் போக 3 கடைகளை விற்றனர். 2003 வரை ஒன்றக வாழ்ந்தார். பிறகு சகோதரரின் கருத்து வேறுபாடினால் சொத்தை பிரித்தனர், 7 லட்சம் ரூபாய் கடன், 1 கடை, குடியிருந்த வீட்டில் சரிபாதி எனது அப்பாவின் கையில் குடுத்தனர். சகோதரருக்கு 1 கடை, குடியிருந்த வீட்டில் சரிபாதி, கடன் கிடையாது என தீர்மாணித்தனர் உறவினர்கள். எனக்கு இதில் உடன் பாடில்லை காரணம் தந்தையின் சகோதரர் மகள் இருவருக்கு திருமணம் ஆயிற்று. எங்கள் வீட்டில் இரு பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தனர் . பிரிவு என்றால் சரி பாதியே பிரிக்கவேண்டும், இது முறையன்று. அதன் காரணமக நான் அவர்கள் யார் வீட்டிலும் தங்க விருப்பம் இல்லாமல் நண்பர்களுடன் தங்க நேர்ந்தது.

சச்சீனா நான் பெங்களூரில் வேலைக்கு செந்த இடம். சச்சீனாவில் நான் எனது கடைமைகளை நிறைவாக செய்தேன் என்று நம்புகிறேன். அங்கே வேலையில் இருக்கும் நண்பர்கள் மிகவும் திறைமைசாலிகள். நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேலைகள் செய்தோம். சச்சீனாவின் சொந்தக்காரரிடம் நான் நன்மதிப்பை பெற்றேன்.

ஒரு முறை செல்வா என்னிடமும் ஜகதீஷிடமும் 2 நாட்கள் பேசாமல் இருந்தான். இது எங்களிடயே வருத்தத்தை உண்டாக்கியது. நான் தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று நினைத்து, அவனிடம் மன்னிப்பு கேட்க்க நினைத்தேன். அவன் அடுத்த நாள் மிகவும் முன்னரே அலுவலகம் சென்றுவிட்டான். எனக்கும், ஜகதீஷ்க்கும் ஒன்றும் புரியவில்லை. நான் எனது அலுவலகம் செல்லும் வழியில் அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "ஏன் யாரிடமும் பேச மட்டேன் என்கிறாய் நான் ஏதேனும் தவறு செய்தால் என்னை மன்னித்து விடு, நான் இங்கே தங்கி இருப்பது உனக்கு தொல்லை தருவதாக நினைத்தால் நான் வெளியேறுகிறேன்" என்றேன். அதற்கு அவன் நீ அலுவலகம் செல்லும் வழியில் நிர்க்கிறாய் என்று நினைக்கிறேன், நான் உனக்கு ஒரு மின்னனு கடிதம் அனுப்பி உள்ளேன் படித்து பார்" என்றான். நான் அதை படித்தேன் அதில் அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டு இருந்தான். பிறகு மீண்டும் இயல்பாய் இருந்தோம். நான் இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் பெயர் மணி என்று நினைக்கிறேன், நாங்கள் அவரை அண்ணா என்றே அழைப்போம். மிகவும் தங்கமான மனிதர், இறக்க குணம் மிக்கவர்; இதை இவரின் நண்பர்கள் சாதகம் ஆக்கிக்கொண்டு இவரை ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் ௯றுவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே.

5 மாதம் சென்றது எனக்கு வீட்டில் பெண் பர்க்க முயன்றனர், நான் இப்பொழுது வாங்கும் ஊதியம் இங்கே குடும்பம் நடத்த போதாது வேற வேலை சென்ற பிறகு பார்க்கலாம் என்றேன். என்னை விட குறைந்த ஊதியம் வாங்கி குடும்பம் நடத்து பவர்களும் உண்டு, ஒரு வரட்டு கவுரவம் என்னை தடுத்தது. அதுவும் ஒரு காரணமாகத்தான் எனது தந்தையின் சகோதரர் முன்பு நாம் கவுரவமாக வாழவேண்டும் என்பதர்க்காகத்தான். ஒரு முறை பாலா சாரிடம் எனது ஊதிய உயர்வு பற்றி கோரினேன், அவர் "உங்களுக்கு வழங்கும் அளவு ஊதியம் யாருக்கும் இதற்கு முன்னர் வேலையில் சேர்ந்த உடன் வழங்கியது இல்லை, எனவே 1 ஆண்டு காலம் ஊதியர்வு இல்லை என நிறுவனத்தின் உரிமையாளர் ௯றினார்" என்றார். பிறகு "ஏவ்வளவு காலம் இங்கே பணிபுரிவீர்கள்" என வினாவினார். நான் "இன்னும் 3 மாத காலம் ஆன பிறகு வேறு ஒரு வேலைக்கு முயற்ச்சிப்பேன்" என்றேன்.

நண்பர் கணேஷ் பெங்களூர் வந்தார் வேலை தேடுவதர்க்காக, நீண்ட வருடங்களுக்கு பின்னர் நாங்கள் அனைவரும் இனைந்தோம். சந்தோஷம் எங்களை அனைத்தது. நானும் நண்பர் கணேஷ்ம் மிகவும் ஜாலியான நண்பர்கள், நாங்கள் ஒருவரை ஒருவர் கெட்டவார்த்தை சொல்லியே அழைத்துக்கொள்வோம்; எங்கள் பேச்சில் 90 விழுக்காடு கெட்டவார்த்தைகளே அதிகம் இருக்கும். எனது பள்ளி நண்பர் சதீஷ்க்கு பிறகு இவரிடமே அதிக நட்ப்பு வைத்து இருந்தேன்.

இரண்டு மாதம் கழித்து நான் வேலை தேட ஆரம்பித்தேன், எனது அதிஷ்டம் சரியாக 4-வது மாதத்தில் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. நான் பால சாரிடம் இது பற்றி ௯றினேன், அவர் "நீங்கள் வேலை தேடுவதை, சற்று முன்னரே தெரியபடுத்தி இருக்கலாமே, இருப்பினும் வாழ்த்துக்கள்" என்றார்.

நங்கள் அனைவரும் சந்தோஷமாய் திருந்தோம், இது நீன்ட நாள் நீடிக்கவில்லை. நான் ஒருபுறமும் கணேஷ், செல்வா மற்றும் ஜகதீஷ் ஒரு புறமும் பிரிந்தோம். பங்காளி ராஜெஷ் தனது சித்து விளையாட்டை ஆரம்பித்தான், மற்றவர்களை அழைத்து கொண்டு வெளியே செல்வது, உணவு விடுதிக்கு செல்வது என இருந்தான், அவன் அழைக்கும் இடத்திற்கு நான் செல்ல மாட்டேன் என தெரிந்தும் என்னை வேண்டும் என்றே அழைப்பன். நான் சிறிது சிறிதாக நண்பர்களை விட்டு பிரிந்தேன், ஒரு நாள் நான் எனது நண்பரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நண்பர் ஒருவர் தங்க இடம் வேண்டும் என கேட்டேன். இதை பக்கத்து வீட்டு பெண் கேட்டுவிடாள் போலும்.

ஒரு நாள் நான் அறையில் தூங்கி கொண்டு இருந்த பொழுது, செல்வாவும், கணேஷ்-ம் மாடிப்படி அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். நான் சிரிது நேரத்தில் விழித்தேன், நான் விழித்து எழுந்த பொழுது அவர்களிடத்தில் பக்கத்து வீட்டு பெண் அவர்களிடம் சென்று 'காளி அண்ணா வீட்டை விட்டு வெளியேற போகிறாரா, அவரது நண்பரிடம் தொலைபேசியில் ௯றிக்கொண்டு இருந்தார்' என்றாள் , அதற்கு நண்பர்கள் "யார் இவனது கையை பிடித்து இழுத்தது தங்க சொல்லி" என்றனர் இவற்றை நான் கேட்க்க நேர்ந்தது. நான் கொபமும், வறுத்தமும் அடைந்து வேறு இடம் தேட ஆரம்பித்தேன், அந்த வாரம் ஞாயிற்று கிழமை காலையில் நான் விடுதி பார்க்க சென்று எதுவும் கிடைக்காமல் மதியம் திரும்பினேன் (3 விடுதி பார்த்தேன், 1 மிகவும் தொலைவு, 2 இடம் சரில்லாமல் இருந்தது, 3 பதுகாப்பு இல்லாமல் இருந்தது). அன்று மதியம் பங்காளி ராஜேஷ் வந்தார் எங்கள் அறை நார்க்காளியில் அமர்ந்து காதை கொடைந்தவாரே என்னை பார்த்து 'என்ன இடம் கிடைத்ததா எப்பொழுது காலி செய்யப்போகிறாய்" என்றான் ஒரு வில்லத்தனமாக, மற்றவர்கள் பார்த்தால் இது இயல்பாய் கேட்டது போன்று இருக்க வேண்டும் என்பது போன்று. என்னால் கோபம் தாளாமல், உடனே இன்னும் 3 மணி நேரம் கொடு அறையை காலி செய்து தருகிறேன் என்று கோபமுடன் ௯றி விட்டு, கடைசியாக பார்த்த பாதுகாப்பற்ற அறை மேளாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் அந்த அறையில் தங்கி கொள்கிறேன் என்றேன். காரணம் முதலாவதாக அவன் என்னிடம் கேட்ட அந்த கேள்வி, இரண்டவது நமது பொருட்களை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதனால். நண்பர் துளசி அங்கே நன்பர்களை பார்க்க வந்தவர் எனக்கு உதவினார். நான் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். நண்பர் கணேஷ் சிறிது கண்கலங்கினார். நான் அவரை பார்க்க முடியாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிலம்பினேன்.

நான் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை, 13 வருடத்திர்க்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த பொழுது நண்பன் சதீஷ் பிரிவை தாங்காமல் அழுதேன், பிறகு இப்பொழுது; என்னால் அழுகையை கட்டு படுத்த முடியாமல் குளியல் அறை சென்று அழுதேன். என் அழுகைக்கு காரணம் எனக்கு தெரியவில்லை. பிறகு அங்கே இருக்க முடியாமல் எனது உறவினர்கள் இருக்கும் இடத்தின் அருகே ஒரு அறை பிடித்தேன்.

7 நாட்களுக்கு பிறகு நண்பர் விஜயபாபு அங்கே வந்தார். அப்பொழுது நான் கணேஷ்யை தொடர்பு கொண்டு "நான் சாமி கும்பிடும் பொருட்க்களை மறந்துவிட்டேன், அதை நண்பர் விஜயபாபுவிடம் கொடுக்கும் படி கேட்டேன்". நான் விஜயபாபு அழைத்துவர சென்றபொழுது அதை பெற்றேன். நான் எனது அறை திரும்பிய பிறகு, அந்த பையை பார்த்தேன், அதில் பூஜை பொருட்களும், ஒரு சில குப்பைகளும் இருந்தன (ஊதுபத்தி சாம்பல், ஊதுபத்தி தீர்ந்த காகித பை). நான் கோபம் கொண்டேன் நாம் என்ன தவறு செய்தோம் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என அறிய அவர்களை தொடைபு கொண்டு "என்னை பிடிக்க வில்லை என்றால் அப்பொழுதே என்னிடம் தெரிவித்து இருக்கலாம்" என்று ௯றிவிட்டேன். அதன் பிறகு இன்று வரை அவர்களை நான் சந்திக்கவில்லை. நான் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்க்க தயாராக இருக்கிறேன்; மன்னிப்பும் கேட்க்கிறேன்; காரணம் பாலசெந்தில் சொன்னது போல் இனிமேல் நாம் கல்லுரியில் படித்து நண்பர்களை சேர்ப்பது முடியாத ஒன்று இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழ்வோம்.

வேலை தேடும்பணி

முதுகலை மென்பொருள் வல்லுனர் என பட்டம் பெற்றபின். ஆறு மாதம் எனது சொந்த ஊரில் பொழுது போக்கி கொண்டுயிருந்தேன். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து கோவில் செல்வேன், பிறகு எனது நண்பர் ஒருவரின் கடையில் சென்று செய்திதாள் படிப்பேன், அவர் எனக்காக கொட்டைவடிகட்டி (காபி), வடை வாங்கிவருவார்.

சரண்யா சிமென்ட் எங்களின் மன்றம், இங்கும் எனக்கு நண்பர்கள் அதிகம். மனோகர், பிரபாகர், பாலசந்தர், நம்பி, சுரேஷ், பாஷ்கர், பாண்டு, சரவணன், தனபால், ராஜேஷ். நாங்கள் 10 பேர், எங்களுக்கு பயமே கிடையாது, எதிர்காலத்தை பற்றிய கவலையும் கிடையாது. இன்றும் எங்களின் சந்திப்பு தொடருகிறது.

பிறகு துபாய் சென்றேன், என்னால் அங்கு இருக்க முடியாததால் திரும்பினேன். அங்கேயும் எனக்கு நண்பர்கள் சேர்ந்தனர். சந்த்ரன் (டான் / பார்ட்னர்), பழனி, ராஜாஜி, செல்வம், மணி, குமார் (குரு). சந்த்ரன் மிகவும் அண்பானவர், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர். என் வாழ்வில் மறக்க முடியாத நண்பர்களில் இவரும் ஒருவர்.

இந்தியா திரும்பியதும், பழையபடி கோவில், நண்பரின் கடைக்கு செல்வது இறவு வீடு திரும்புவது என இருந்தேன்.

இப்படியாக 4 மாதம் சென்றது, பொருப்பில்லாமல் ஊர் சுற்றினேன். 22 வருடம் பிறகு எனது தந்தை என்னை பற்றியும் எனது எதிர்காலம் பற்றியும் கவலை கொண்டார். அது என்னை மிகவும் பாதித்தது. உடனே சென்னையில் இருக்கும் நண்பர் மகெஷ்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்குவதற்கு மட்டும் இடம் அமைத்து தருமாரு கேட்டேன், அவரும் அனுமதித்தார். ஏதோ ஒரு தைரியத்தில் சென்னை சென்றேன். கையில் இருப்பதோ 2500 ரூபாய். எனது பெற்றேரிடம் பண உதவி நாடவில்லை ஏனெனில் ஒரு வரட்டு கவுரவம், நான் வைத்து இருக்கும் பணமும் அவரிடத்தில் இருந்துதான் வந்தது என்பது அப்பொழுது என்னால் அறிந்து கொள்ளமுடியவில்லை, அறிந்து கொள்ளமுடியவில்லை என்று சொல்வதை விட ஏற்று கொள்ளமுடியவில்லை.

அதில் அறை வாடகை 800 ரூபாய் கழிந்தது. தினமும் எனது கோப்பை (பைல்) எடுத்து 2 இட்லி உண்டு வேலை தேடுவேன், ஏனெனில் மீதம் உள்ள பனத்தில் 2 மாதம் வாழவேண்டுமே. அப்பொழுதுதான் வறுமயின் நிறம் சிகப்பு படம் நினைவில் வந்தது. நான் ஒன்றும் கதானாயகனும் இல்லை, அவ்வாறு கடினப்படவும் இல்லை; எல்லம் ஒரு நினைவுதான். மதிய உணவாக 10 ரூபாய் மட்டுமே செலவு செய்வேன். இரவு நண்பர்கள் எனக்கு உதவுவர், அதிலும் சுந்தர் அதிக முறை உதவியவர். "உப்பிட்டவரை உள்ளளவு நினை" என்பர், நான் இன்றுவரை அவ்வாறு நடக்கிறேன். இப்பொழுதும் நான் நல்லவன், நன்றி மறவாதவன் என்று தெறிய படுத்த அல்ல. சென்னையிலும் எனக்கு நண்பர்கள் கிடைத்தனர். பாலசெந்தில்வேலன், உமாசங்கர், ஷரி, ரகு, பெருமாள், தேவேந்திரகுமார் (சுந்தர் சகோதரர்), கார்த்தி (தேவேந்திரகுமார் நண்பர்) மற்றும் பலர். எங்களை வழினடத்தும் ஆசானாக கணபதி, பிரபாகர். ஒன்றறை மாதம் சென்றது, யோகேஷ் ராம்கோவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது வேலை பிரமிட்-ல் காலியாக இருந்தது. அந்த வேலைக்கு என்னை சிபாரிசு செய்ய கணபதி அண்ணன் விரும்ப வில்லை. காரணம் அந்த நேரத்தில் நான் அதிகமாக கெட்டவார்த்தை பேசுவேன்; நண்பர்களிடம் பேசும்போது எனக்கு பழக்கம் ஆகிவிட்டதால் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை, எங்கே நான் வேலை செய்யும் இடத்திலும் அவ்வாறே செய்து விடுவேனோ என்று பயம் அவருக்கு. இது அனைவருக்கும் வறும் வரவேன்டிய கோபம் / பயம். காரணம் வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் தவறு நேர்ந்தால் வேலைக்கு சேர்த்தவரே பொறுப்பனவர் ஆவார். இதை கேட்டு முதலில் கோபம் கொண்டேன், பிறகு அது தவறு என்பதை உனர்ந்து என்னை மாற்றிகொல்ல முயன்றேன்.

எனக்கு சிபாரிசு செய்வது தவறு, அவர் அவர்களே வேலை தேடவேண்டும்; அப்பொழுதுதான் வேலை கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்கு தெரியும் என்று பிரபாகர் ௯றியதாக நான் கேள்விபட்டேன். அதையும் மீறி கணபதி அண்ணன் என்னை அந்த வேலைக்கு சிபாரிசு செய்தார்.

பிரமிட்; நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்த தொழிலகம். வேலை செய்யும் இடம் ஆட்டொலக் என்னும் ஒரு தனியார் தொழிலகம். நான்கு சக்கர வண்டிகளுக்கு உதிரிபாகம் உற்பத்தி செய்யும் இடம். அங்கு நான் எனது பனியை தொடங்கினேன். அன்றுமுதல் கணபதி அண்ணன் எனது வழ்வின் முன்னோடியானார்.

பாலசெந்தில் :-
-----------------
நாங்கள் என்றாவது ஒரு நாள் உற்ச்சாக பானம் அறுந்த செல்வேம். ஒரு முறை பாலசெந்தில் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னான் "இது வரை நாம் சேர்த்தது தான் நண்பர்கள், இனியும் பள்ளிக்கோ, கல்லூரிகோ சென்று நண்பர்கள் சேர்க்க போவது இல்லை; எனவே இருக்கும் நண்பர்களுடன் அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வோம்" என்றான். அது எனதை மிகவும் பாதித்தது.

சுந்தர்:-
---------
நாங்கள் இருவரும் நல்ல விசயத்திற்க்கு இனைகிறோமோ இல்லையோ, மற்றவர்களை கிண்டல், கேளி செய்ய, மற்றவர்கள் கெட்டுபோக இனைவோம், இதில் அடிக்கடி எங்களிடம் சிக்குவது யோகேஷ். யோகேஷ் சுந்தர் சொல்லுவதை எப்பொழுதும் மறுக்காமல் செய்வான். எங்கள் இடையே எப்பொழுதாவது சிறு சண்டை நேரும். இருவரும் 1 மணிநேரம் பேசாமல் இருப்போம், பிறகு நான் பாலசெந்தில் சொன்னது நினைவில் கொண்டு அவனிடம் பேசசெல்வேன், அதற்குள் அவனே என்னிடம் வந்து பெசுவான். இதுவே அவனிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

யோகேஷ்:-
----------
நண்பர்களை அறவனைத்து செல்வதில் வள்ளவன். நண்பர்களுக்குள் எப்படி விட்டுக்கொடுத்து செல்வது என்பது இவனிடம் இருந்தே நான் பலமுறை கற்றது உண்டு. அனைவரிடமும் பாசம் மிக்கவன். நான் பல முறை அவனிடம் செய்யும் தவறுக்கு அவனே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்பான். இந்த மின்னனு வலை மூலியமக அவனிடம் நான் இதுவறை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

மகேஷ்:-
---------
உலகில் திசையை அறிய திசை காட்டி என்று ஒன்று உண்டு. பல நண்பர்களுக்கு இவனே திசை காட்டி, என்னையும் சேர்த்துதான். எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இருவரும் விட்டு கொடுத்து செல்லமாட்டோம். இவனிடம் நான் மன்னிப்பு கெட்க்க போவது இல்லை, ஏனெனில் நண்பர்களிடயே சிறு சண்டை இல்லை என்றால் ஒரு சுவாரசியம் இருக்காது. எனவே "டேய் மகேஷ் என்னை மன்னிக்காதே டா".

என்னடா இவன் அனைவிரடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறான் என்று என்னுவீர்கள்; அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்ப்பதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் நான் எவ்வளவு பெறிய கல்நென்ஞம் படைத்தவன் என்றும், அயோக்கியன் என்றும்.

உமாசங்கர்:-
------------
பெற்றோர் மீது பிள்ளைகள் எந்த அளவு பாசம் காட்ட வேண்டும் என்பதை இவனிடம் இருந்தே கற்க்கவேண்டும் (சுந்தர் இந்தை படித்தால் கன்டிப்பாக என்னை திட்டுவான், இல்லையெனில் அவனை நான் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே கொள்ளலாம்). உமா எந்த நண்பரையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டான். இதில் பெண் நண்பர்களுக்கு முக்கியத்துவம் அதிகம் (என்னை திட்டதே டா!!!).

தேவேந்திரகுமார்:-
-----------------
இவரிடம் எனக்கு அவ்வாறாக நட்ப்பு இல்லை, எனினும் அவரை பற்றி நான் அரிந்ததை எழுதுகிறேன்.

மிகவும் திறமைசாலி, நண்பர்களுக்காக எந்த நேரத்திலும் எந்த உதவியும், எதுவும் செய்யக்௯டியவர். திறமைசாலிகலை மதிப்பவர், மதிக்க தெரிந்தவர். இதுவே நான் இருந்து இவரிடம் கற்றது.

கார்த்தி:-
---------
நம்முள் திறமைகலை எப்படி வளர்ப்பது என்பது இவரிடம் இருந்தே கற்க்கவேண்டும். தன்னுள் இருக்கும் திறமைகலை தினமும் மெருகு ஏற்ற ௯டியவர், தெரிந்தவர். திறமை இல்லை என்று ௯றுபவர்கள் இவரை பார்த்து தன்னை மாற்றிக்கொள்ளமுடியும்.

ஈஷ்வர் பிரசாத்:-
----------------
எங்கள் அணியில் தன்னிகரற்ற திறமைசாலி. வேலையில் எவ்வாரு ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பது இவரை பர்த்த பின்பே கற்றேன், ஆனால் கடைபிடிக்க முடியவில்லை. இவரை பார்த்து பலர் வியந்ததுண்டு. சிறந்த நண்பர்.

பிரபு:-
------
கல்லூரி நாட்க்களில் இனைந்து, வேலை தேடும் வரை நாங்கள் பிரியவில்லை, எனது வாழ்வில் குற்ப்பிடும்படியான நண்பர்களில் இவரும் ஒருவர். எனது பிறந்த நாளும் இவரின் பிறந்த நாளும் ஒரே தேதி, மாதம், வருடம். இவை எல்லாம் ஒரே மாதிரியாய் இருந்தாலும் என்னை போன்று இல்லை, மிகவும் கன்னியமான நண்பர்.

கணபதி அண்ணன்:-
-------------------
என்னை முதலில் வேலைக்கு சிபாரிசு செய்தவர், சிபாரிசு என்பதை விட, எனக்கு வேலை வாங்கி கொடுத்தவர். எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் அக்கறை கொண்டவர்; எங்களின் வழிகாட்டி. என் மீதும் தான், இதை நான் ௯ற காரணம்; எங்கள் சென்னை நண்பர்கள் வட்டாரத்தில் நான் சற்று மதிப்பு குறைந்தவன். இது மற்றவர் ௯றியது இல்லை, நானே என்னை ௯றி கொள்வது, காரணம் எனது பழக்க வழக்கம் அப்படி. இவரையும் நாங்கள் ஏமாற்றுவது உண்டு, புகைபிடிப்பது, உற்ச்சாகபானம் அருந்துவது, சீட்டு விளையடுவது போன்றவற்றிர்க்காக. இவரை நாங்கள் ஏமாற்றினால் மேலே ௯றியதில் ஒன்றே காரணம். எனது எதிர்காலத்தை நிர்ணயம் செய்தவர். எனது வாழ்வின் வடக்குநோக்கி, வடக்குநோக்கியென்றல் மலையாலத்தில் திசை காட்டும் கருவி என்று பொருள்.

பிரபாகர் அண்ணன்:-
-------------------
எங்கள் அனியின் தலைமைவாதி தீவிரவாதி. மிகவும் ஜாலியான நண்பர். இவர் ௯றுவதை நாங்கள் கேட்கவேண்டும் என்று என்னம் உடையவர். இவர் பேச்சு, கனிப்பு மிகவும் சரியாக இருக்கும். இதை மீறி பலமுறை நான் கையை சுட்டுக்கொண்டது உண்டு. இது நான் இவரை 'தாஜா' பன்னுவதற்க்காக சொல்லவில்லை. இவரை நண்கு அறிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். இவரிடம் நான் சிலமுறை இல்லை பல முறை அடிவாங்கியது உண்டு. அந்த நிமிடத்தில் கோபம் கொண்டலும் நம்மிடம் இருக்கும் உரிமையில் செய்வதை கொண்டு மகிழ்ச்சி கொள்வதுண்டு.

ஷரி:-
------
சென்னையில் நான் சந்தித்தது முதல் இன்று வரை என்னிடம் (என்னக்கும்) மரியதையுடன் அழைப்பவர். அமைதியான நண்பர்.

பெருமாள்:-
-----------
கணக்கு வழக்குகலை வரையரை செய்யும் பட்டம் பெற்றவர். படிக்கும் நேரம் இது விளையாடும் நேரம் இது என்று வரையருத்து வாழ்பவர். மற்ற பெற்றோர்களும் தன் பிள்ளைகள் இவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாய் திகழ்பவர். இவரை போன்ற ஒருவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை.


தோள் கொடுக்க, சண்டை போட, எந்த நேரத்திலும் பொங்கல் போட, அணைக்க, அடிக்க, கோவிச்சுக்க அப்பறம் பழம் விட்டுக்க எனக்கு இருக்கும் நண்பர்கள் கணபதி அண்ணன், பிராபாகர் அண்ணன், விஜயபாபு, சுந்தர், யோகேஷ், மகெஷ், உமா, ஷரி, பிரபு, தனபால், ரகு, துளசி, கணேஷ், செல்வா, பாலா, சரவணன், வெங்கட்...

Monday, June 4, 2007

முதுகலை பட்டம்

பிறகு மேல் படிப்பிற்காக அயல்நாடு செல்லவில்லை, ஏனெனில் 62 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேற்ச்சி பெற்றேன். இதை வைத்து ஆகாயவிமானத்தில் பயணத்திற்கு ௯ட இடம் கிடைக்காது;அப்புறம் எங்கே அயல்நாடு. என்னிடம் உள்ளூர் செலவாணிக்கே வக்கில்லை ;அப்புறம் எங்கே அன்னிய செலாவானி என்பது போன்று அயிற்று.

முதுகலை மென்பொருள் வல்லுனர் படிப்பிற்க்காக, பாரதிதாசன் பல்கலை கழகத்தில் சேர்ந்தேன். அங்கே மீண்டும் நண்பர்கள் சேர்ந்தோம். முறையே பிரபு, மகேஷ், சுந்தர், யோகேஷ், வேனீஷ், ஜஷ்டின், ஜேசப், கோபிகன்னன் (ஆசான்) மற்றும் பலர். எனது இளநிலை படிப்பின் போது ஒரு நண்பரை சுட்டி காட்ட மறந்தேன் அவர் வெங்கட் இன்னும் உள்ளனர் (மற்றவர்கள் மண்ணிக்கவும்). மகேஷ் அனைவிரிடமும் நட்புடன் பழகுபவர், நான் அவரிடம் சரியாக பழகவில்லை இன்றுவறை (நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால், இதன் மூலயமாக அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்). சுந்தர் மிகவும் கலகலப்பான நண்பர் அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. யோகேஷ்; நண்பர்களிடன் எவ்வாறு விட்டு கொடுத்து செல்வது என்று இவரிடமே கற்றுக்கொள்ளவேண்டும்.

இங்கும் எனது 'பிட்' அடிக்கும் செயலை கையாண்டேன். ஜமால்மொகமது கல்லூரியில் 'பிட்' அடிப்பது என்பது மிகவும் கடினம். 'டிசு'(tissue) என்றொரு காகிதம் பிரபலம் ஆகியது. நான் பயிலும் காலத்தில், இது வியர்வையை துடைப்பதற்க்காக அறிமுகப்படுத்தினர். நான் அதில் எழுதி 'பிட்' அடிக்க ஆரம்பித்தேன். இங்கு 'டிசு' பயன் படுத்தினேன், என்னை யாரும் கண்டு கொள்ளாததால் மார்தட்டி சென்று கொண்டுயிருந்தேன், ஒருமுறை ஒரு கண்காணிப்பளர் என்னை பார்த்துவிட்டார். எனக்கு பயம் தொற்றியது, கை மற்றும் கால் நடுக்கம் கொண்டது, அவர் என்னை நேக்கி நகர்ந்து வந்து கொண்டுயிருந்தார். என்ன செய்வது என்று என்னியபொழுது ஒரு யோசனை தோன்றியது, உடனே 'டிசு' காகிதத்தில் மூக்கை சிந்திவைத்து விட்டேன். அதை அவரால் தொடமுடியாமல் முறைத்து பார்த்துவிட்டு சென்றுவிட்டார் (இதுவே நான் 'டிசு' காகிதத்தை கையாளுவதற்க்கு காரணம், மற்றவர்களுக்கும் இதையையே நான் அறிவுருத்துகிறேன், யாரும் திட்டவேண்டாம்).

இறுதியாக மென்பொருளில் முதுகலை பட்டம் பெற்றேன். இம்முறையும் நான் பட்டம் பெருவதற்கு விஜயபாபு, செல்வாவே காரணம். பிறகு நாங்கள் பிரியும் நேரம் நெருங்கியது, எங்களது பிரிவு மிகவும் வருத்தத்தில் கொண்டுசென்றது.

நண்பர்கள் :-
தயாலன், தனசேகர், கரிகரசுதன், காமராஜ், கோவிந்தன் மற்றவர்கள் மன்னிக்கவும் என்னால் நினைவில் கொள்ளமுடியவில்லை, விரைவில் அனைவரையும் இணைப்பேன்.

கல்லூரி (இளம்கலை பட்டதாரி)

கல்லூரி என்றால் மனமகிழ் மன்றம் போல் சினிமாவில் சித்தரிப்பர். அதே எண்ணத்தோடு தான் நானும் எனது கல்லூரி வாழ்வில் நுழைந்தேன். ஆரம்பத்தில் எனக்கு நண்பர் யாரும் இல்லை. காலப்போக்கில் நானும் ஒரு நண்பர்கள் வட்டாரத்தில் நுழைந்தேன். முதலாவதாக செல்வா, கணேஷ், விஜயபாபு, துளசிராமன், ராஜேஷ், பாலா.

கல்லூரியில் படிக்கும் பொழுது எனக்கு பெண் நண்பர்கள் கிடையாது காரணம் நான் பெண் நண்பர்களை ஏற்க்காமல் அல்ல, எந்த பெண்ணும் என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

ஒவ்வொறு பரிட்சை கால கட்டத்திலும் செல்வா, விஜயபாபு தான் எங்கள் அனைவருக்கும் சொல்லி கொடுப்பர். அதிலும் நான் அவர்களுக்கு அதிகம் தொல்லை தருபவன். மீண்டும் மீண்டும் கேட்க, சொல்லும் பொழுது திட்டுவர், இருப்பினும் சொல்லித்தருவர். 3 அல்லது 4 முறை சொன்னாலும் என்னால் நினைவில் கொல்ல முடியாது. அதன் காரனமாக 'பிட்' அடிக்க அரம்பித்தேன். முதல் முறையாக அடிக்கும் பொழுது சற்று பயமாக இருந்தது, பிறகு பழகிற்று. அதிலும் பல உத்திகளை கையாண்டேன்.

'பிட்' என்றால் ஒருசில கேள்விகள் மட்டுமே கொண்டுசெல்வர். நான் சற்று மாறுபட்டு 5 பாடத்தையும், அனைத்து கேள்விகளையும் கொண்டு செல்வேன்.

கணக்கு பாடத்தில் மட்டும் சற்று ஆர்வம் அதிகம்; அதன் காரணமக முறையே 96 & 98 மதிப்பெண் பெற்றேன். மற்ற பாடங்கள் எல்லாம் காப்பிதான். இறுதியாக இளநிலை பட்டம் பெற்றேன். அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்பறித்தோம். நான் மனதில் முறையே விஜயபாபு, செல்வா -க்கு நன்றி ௯றினேன். இது அவர்கள், இவற்றை படிக்கும் பொழுது என்மீது அன்பு கொள்வதற்க்காக அல்ல... இது உண்மை; அனைவரும் அறிந்தது. அவர்களுக்கு மட்டும் அல்ல நண்பர்கள் அனைவருக்கும்.

பள்ளி நாட்கள்

எனது அப்பாவின் சொந்த ஊர் எருமனாயக்கன்பட்டி, பழனியில் இருந்து சுமார் 8 மைல் கல் தொலைவில் உள்ளது. அவருக்கு உடன் பிறந்தவர்கள் 3 பேர், முதலில் அக்கா, பிறகு அண்ணன், பிறகு இவர், பிறகு ஒரு தங்கை. எனது தாத்தா (அப்பாவின் அப்பா) 27 வயது இருக்கும் பொழுது சொந்தக்காரர் ஒருவர் இவரின் சொத்தை அபகரித்துக்கொன்டார். அன்று முதல் மன நிலை பாதிப்படைந்தார். அப்பாவிற்க்கு 5 வயது இருக்கும் பொழுது, முதன் முதலாக பள்ளிக்கு சென்றார். அன்றே அவரது தாயார் மரணம் அடைந்தார். பிறகு தனது சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது அக்கா சுட்டு தரும் இட்லியை காலை 7 மணிக்குள் விற்று அதில் மீதமாகும் உடைந்த இட்லியை உண்டு (ஒரு சில நாள் இதுவும் இருக்காது) பள்ளிக்கு பழனிக்கு நடந்தே செல்வார்.

எனது தாய் அவரது பெற்றோருக்கு 2 வது பிள்ளை, முதலில் ஒரு அக்கா, பிறகு இவர், 2 தம்பிகள். எனது தாய் சற்று ஊனமானவர். எனவே வீட்டிற்க்கு சற்று செல்லமானவர் (இன்றும்).

நான் எனது பெற்றேர்களுக்கு முதல் பிள்ளை, தலச்சான் பிள்ளை தருதலயாகத்தான் வளரும் என்று நமது முன்னோர் ௯றுவர், அது எனது பிறப்பை அறிந்தே ௯றினர் போலும். எனது 3 வயதில் எனது தந்தை கடைக்கு என்னை அழைத்து செல்லவில்லை என்றதால், அவரை தவறாக பேசி அடி வாங்கினேன், அதுவே கடைசி. பிறகு இன்று வரை என்னை அவர் திட்டியது ௯ட இல்லை.

பள்ளிநாட்கள் :-
நான் 4 வயதில் அரைப்பள்ளிக்கு சென்றேன். என்னை வீட்டில் இருந்து அழைத்து செல்ல ஒரு பாட்டி வருவார். எனது தாத்தா என்னை பள்ளிக்கு அனுப்ப அனுமதிக்க மாட்டார் (அப்பாவின் அப்பா). இவன் குழந்தை விட்டுவிடு என்று ஆயாவிடம் ௯றுவார். இந்த குழந்தை குட்டிசாத்தான் வேலை செய்யும் என்பது அவருக்கு தெரியது. ஏனென்றால் அப்பொழுது எனக்கு பெண் நண்பர்கள் மட்டுமே உண்டு (யாரும் திட்டவேண்டாம் அது அறியாத வயது). பிறகு 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்தேன், இது அரசாங்க பள்ளி. நான் 1ம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு அசிரியர் என்னை முதுகு சிவக்கும் படி அடித்தார், அன்று மாலை எனது அப்பா அவரை அவரது இருப்பிடம் சென்று, சாக்கடையில் தள்ளி அடித்தார், காரணம் என்மேல் உள்ள பாசம்.
இந்த பள்ளியில் படிக்கும் போது ,பெண்கள் என்னை மட்டுமே நண்பனாய் ஏற்றுக்கொண்டனர் (இதுவும் அறியாதவயது), மற்ற மாணவர்களுக்கு இது கோபத்தை உண்டாக்கியது, உமா, ப்ரியா, ஜெனட், ஷேமா, கவிதா, ரதி இவர்கள் எல்லாம் எனது தோழிகள். சதீஷ், ரமேஷ், ரவி இவர்கள் தான் எனது உற்ற நண்பர்கள்.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை எங்கள் ஊர் மேல் நிலை பள்ளியில் பயின்றேன். சதிஷ், ரவி இருவரும் என்னுடனே படித்தனர். பள்ளி நாட்களில் நான் ஒரு சுட்டிப்பையன். அடிதடி, கலாட்டா என்றால் கண்டிப்பாக எனது பங்கு அதில் இருக்கும். நான் 10ம் வகுப்பு படிக்கும் பொழுது எனது ஆசிரியர் என்னை அழைத்து நீ தான் படிக்க மாட்டாய் சதிஷ் நன்றாக படிப்பவன் அவனை உன் ௯ட சேத்து அவனது படிப்பை கெடுக்காதே என்றார். நான் அவனை விட்டு விலகினேன். எனது வாழ்வில் நண்பனை பிரிந்து, பிரிவினையால் அழுத முதல் நாள்.
11 மற்றும் 12ம் வகுப்பு அதே பள்ளியில் சேர்ந்தேன் கணிப்பொறியை முதன்மை பாடமாக ஏற்று. மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே வகுப்பறையில் இருப்போம் மற்ற நாட்கள் மைதானம் தான் எங்கள் வகுப்பறை. அந்த இரு நாட்களும் ஆசிரியரிடம் அடி வாங்குவதற்காக செல்வோம் வகுப்பறைக்கு செல்லாததற்கு... பிறகும் வகுப்பறைக்கு செல்லமாட்டோம்.
12ம் வகுப்பு சென்றோம், பொறுப்புகள் ௯டிற்று; ஆயினும் கலாட்டாகள் குறையவில்லை. தினமும் கடவுள் வாழ்த்து பாட பள்ளியின் நடுவே மாணவர்கள் ௯டுவர், நாங்களும்தான் ஆனால் நாங்கள் அனைவரும் மற்ற மாணவர்களிடம் இருந்து மாறுபட்டு இருக்க நெற்றியில் ஏதேனும் ஒரு ஒவியம் வரைந்து செல்வோம். தலைமை ஆசிரியர் கோபம் கொண்டு, தினமும் ஒலி பெருக்கியில் எங்கள் வகுப்பு மாணவர்களை மட்டும் சுட்டி காட்டி தகாத வார்த்தையினால் திட்டுவது வழக்கம், இதற்கு மூல காரியதரிசி நான், இதன் காரணமாக அனைத்து தொல்லைகளுக்கும் நானே முன்னோடி என்று என்னை காரணம் இல்லாமல் அனைத்து ஆசிரியரும் அடிக்க ஆரம்பித்தனர், ஒவ்வொரு முறையும் அடி வாங்கும் பொழுதும் எனக்கு பிடிக்காத நண்பர்களை மாட்டிவிடுவது வழக்கம், இதன் காரணமாக அனைவரும் எனக்கு நண்பர்களாயினர், பிறகு எனக்கு ஆதரவாக ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தனர். பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் எங்களை சபித்தனர். அவர்களது சாபமோ என்னவோ, 42 மாணவர்களில் 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்களில் நானும் ஒருவன். பிறகு படித்து தேர்ச்சி பெற்றேன்.

நான் வாங்கிய அடிகளில் ஒன்று அல்லது இரண்டு சுவாரசியமன சம்பவங்கள். அவற்றில் ஒன்றுதான் இது...

எனது இயற்பியல் ஆசான் பெயர் அருனாச்சலம் மிகவும் திறமையான ஆசிரியார், என்னடா இவன் ஆசிரியருக்கே மதிப்பெண் இடுகிறானே என்று என்ன வேண்டாம், எந்த ஒரு பொருளும் நம்மிடம் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தேரியாது அது நம்மை விட்டு சென்ற பிறகுதான் அதன் அருமை தெரியும் என்பார் எனது தாத்தா. அது போன்று படிக்கும் காலத்தில் அவரது திரமைகளை நான் தெரிந்தும் அவர் கற்பித்ததை நான் ஏற்கவில்லை.

அவருக்கு உடல் நலம் சரி இல்லாததால். ஆசிரியர் எப்பொழுதும் கடவுள் வாழ்த்து நேரத்திற்க்கு வரமாட்டார் சற்று கால தாமதமாகவே வருவது வழக்கம், ஒரு முறை சற்று முன்னரே அதாவது சரியான நேரத்திற்கு வந்துவிட்டார். அதை பார்த்த எனது நண்பர் ஒருவர் 'ஆசிரியருக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது பேலும் அதான் வழக்கத்திற்கு மாராக முன்னரே வந்துவிட்டார்' என்று ௯றினான், இதை அவர் கேட்டுவிட்டர். பக்கத்தில் நான் இருந்ததால் நான் தான் இதை ௯றி இருப்பேன் என்று கருதி என்னை அடித்தார். இருப்பினும் அவருக்கு போதவில்லை, எப்பொழுதும் கடவுள் வாழ்த்து முடிந்த பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு வரிசையாக செல்கின்றனரா என பார்க்க ஒரு விளையாட்டு ஆசிரியர் கன்கானிப்பது வழக்கம். அவரிடம் இவர் ஏதோ சொன்னார் அதை இப்பொழுது நான் மறந்துவிட்டேன், அவர் வந்து அவரது பங்கிர்க்கு சில அன்பளிப்புகள்.

சிறு வயதில் என்னை அடித்ததர்காக ஒரு ஆசிரியரை திருப்பிஅடித்தர் எனது தந்தை. பிறகு இது போன்ற நிகழ்வுகலை அவர் கண்டு கொள்வது இல்லை. தருதலை இது எங்கே உருப்புட போகிறது என்று நினைத்து விட்டார் போலும்

நண்பர்கள்
சிங்காரம் (ஆதிகுடி), இராமகிருஷ்னன் (ஆதிகுடி), மனோகரன் (திருமனமேடு), அருண், தனபால் (௯௯ர்), செந்தில் ( நந்னிமங்கலம்), செந்தில் (மணக்கால்), ஆல்பட்ரொசாரியோ (வாளாடி), பிரபு, சுப்பிரமணியன், முருகானந்தம், முருகானந்தன், செந்தில்குமார் (கே.வி.பேட்டை), பெரியார் பிரைன், ராஜ்குமார், சக்திவேல், பாஷ்கர், கார்த்திகேயன், சதீஷ், சக்கரவர்த்தி, திருநாவுக்கரசு, சத்தியநாராயனன், பி.சிவராமன், தர்மராஜ் (நகர்), சிவராமன் (நகர்), செந்தில் (வாளாடி), செந்தில் (பச்சாம்பேட்டை), ஜான், சசிகுமார், நந்தகுமார், நெல்சன், சகாயராஜ் ...

Tuesday, May 29, 2007

திருதவத்துறை


எனது சொந்த ஊர் திருதவத்துறை. எங்கள் ஊரில் 2 சிவன் கோவில் உள்ளது, ஒன்று எங்கள் ஊரில் இருந்து 4 மைல் கல் தொலைவில் உள்ளது, அக்கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுமார் 3 முதல் 4 அடி உயர பச்சை மரகதக்கல்லால் ஆனது. இது ஆசிய கன்டத்திலேயே முதன்மையானது.

மற்றொன்று எங்கள் ஊரின் மையத்தில் உள்ளது இது சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சான்றோர் ௯றுவர். இந்த கோவிலின் உச்சத்தில் எப்பொழுதும் ஒரு சிகப்பு நிற கொடி பறக்கும். ஒரு முறை வடக்கை ஆண்ட ஒரு மன்னன் எங்கள் ஊர் பக்கமாக வந்த பொழுது அக்கோவிலை சுட்டிகாட்டி தனது அமைச்சரிடம் கேட்டறிந்தார். அவர் கேட்டதாவது, "லால்குடி" என்று, "லால்"- என்றால் சிகப்பு, "குடி"- என்றால் கொடியை குறிப்பது, அவரது வழக்கத்தில். அம்மன்னன் எங்களது ஊரை சில காலம் ஆண்டபொழுது இப்பெயர் அமைய பெற்றது.

சுமாராக 8 மைல்கல் சுற்றளவு கொண்ட, எங்கள் ஊரின் மக்கள் தொகை 10,000 -த்தை எட்டும். எங்கள் ஊரில் ஆண், பெண் என இரு பாலருக்கும் தனி தனியே மேல் நிலை பள்ளி உள்ளது, இவற்றின் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் கற்பிக்கின்றனர். தலா 1200 மாணவர், மாணவியர் கல்வி கற்கின்றனர். 5 உயர் நிலை பள்ளிகலும் (4 தமிழ் வழி,1 ஆங்கிலம்). 11 நடு நிலை பள்ளிகளும் உள்ளது (8 தமிழ், 3 ஆங்கிலம்).

மொத்தம் 50 இக்கும் மேற்பட்ட குளம் இருந்தது, இப்பொழுது சுமாராக 25-இக்கும் மேல் ஆக்கிறமிப்பு செய்துவிட்டனர். அவற்றில் ஒன்று, அரசியல் கட்சியினால் பகிறங்கமாக ஏலம் விட்டனர். அக்குளம் ஊரின் மையத்தில் 300 அடி சுற்றளவு கொண்டது.

ஊரின் மையத்தில் புகைவண்டி நிலையம் ஒன்று உள்ளது. இரு காவல்துறை அலுவலகங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று மகளிர் காவல் நிலையம்.

Monday, May 14, 2007

முதல் தோற்றம்

ஒருமுறை நான் மின்னனு அஞ்சல் மூலமாக எனது நண்பர் விஜயபாபு பூபதி அவர்களை தொடர்பு கொண்டபொழுது அவர் இந்த முகவரியை தந்தார்.


இந்த வலையில் எனது நூல்(ள்)களையும் இணைப்பதற்க்கு எனது நண்பரே தூண்டுகோளாகவும், முன்னோடியாகவும் இருக்கிறார்.